உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரக தெரிவிக்கையில், உலக சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அமெரிக்க - ஈரான் போருக்கு முன்னர் காணப்பட்ட மட்டத்திற்கு இன்னும் குறைவடையவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க மற்றும் ஈரான் ஜனாதிபதிகளுக்கு இடையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் எட்டப்பட்ட பூர்வாங்க அமைதி உடன்படிக்கையை அடுத்து, உலகளாவிய மசகு எண்ணெய் விலை தற்போது கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்று (22) நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.18 டொலராகவும், WTI வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.29 டொலராகவும் பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்ததன் நன்மையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஏற்கனவே எரிபொருள் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.
இருப்பினும், உலக சந்தையின் தற்போதைய விலை நிலவரம் உள்நாட்டு சந்தையில் விலைக்குறைப்பை ஏற்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை என இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.
Latest News
தெல்தெனிய கொலை வழக்கு: பிரதான சந்தேகநபரின் பாரிய நிதி மோசடி வலையமைப்பு அம்பலம்
Local
23 June 2026
தலவத்துக்கொட உடற்பிடிப்பு நிலைய முற்றுகை: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Local
23 June 2026
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி - இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
Local
23 June 2026
2029-இல் மாறப்போகும் இலங்கை டிஜிட்டல் தொலைக்காட்சி திட்டம்
Local
23 June 2026
அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Local
23 June 2026
அமெரிக்கப் பேச்சுவார்த்தை: ஈரானுக்குக் கிடைக்கும் பாரிய பொருளாதார நன்மை!
Local
23 June 2026
2027 முதல் முன்பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றம்!
Local
23 June 2026
மின்மயமாக்கல் நோக்கி நகரும் உலகம்
Local
23 June 2026
ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்!
Local
23 June 2026
பாலஸ்தீன சிறுவர்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலில் – ஐநா குழு எச்சரிக்கை
Local
23 June 2026