General23 June 2026

சீகிரிய நுழைவாயிலுக்கு முன்பாக காட்டு யானைத் தாக்குதலிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டுப் பெண்கள்

சீகிரியாவைப் பார்ப்பதற்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் நடந்து வந்து, அதன் நுழைவாயிலை அடைந்த நான்கு வெளிநாட்டுப் பெண்களை, அந்தப் பகுதியில் நடமாடும் காட்டு யானையொன்று தாக்குவதற்கு முற்பட்ட காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் பெரும்பாலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காகவே அதிகாலையில் சீகிரியாவுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எந்தவொரு சுற்றுலா வழிகாட்டியும் இல்லாமல் இவர்கள் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

எனினும், அந்த இடத்தில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் சாதுரியமான மற்றும் விரைவான செயற்பாட்டினாலேயே இந்த வெளிநாட்டுப் பெண்கள் நால்வரும் காட்டு யானையின் தாக்குதலிலிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes