General14 July 2026

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன.

இந்தத் தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

'மொம்பாசா' (Mombasa) மற்றும் 'அல் பாஹியா' (Al Bahiyah) ஆகிய இரு கப்பல்களே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

ஒமான் கடல் எல்லைக்குள், ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதையில் இந்தக் கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes