General19 July 2026

உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டி - கேரளப் பாடசாலைகளுக்கு விடுமுறை!

கேரளாவில் நாளையதினம் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்தநிலையில் கேரளாவில் கால்பந்து மீதான அதீத ஆர்வத்தைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றும், கேரள பொதுக் கல்வித்துறை இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.

இந்த விடுமுறை பொதுக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

கல்லூரிகளுக்கு இது தொடர்பாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes