நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சென்றடைய வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவை, தங்களது மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக வரவு வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 அரச ஊழியர்களில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Latest News
யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவருக்கு காயம்
Local
12 August 2026
கிரிக்கெட்டில் புதிய பயணத்தைத் தொடங்கும் ரஹானே!
Local
12 August 2026
‘தர்மன்’ திரைப்படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தீவிரம்
Local
12 August 2026
அருண்ராஜா காமராஜ் படத்தைக் கைவிட்ட விஷ்ணு விஷால் – கருத்து வேறுபாட்டால் முறிந்த கூட்டணி
Local
12 August 2026
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' - முன்பதிவில் புதிய சாதனை!
Local
12 August 2026
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் திடீர் மாற்றம் : அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
Local
12 August 2026
அரசாங்கம் சர்வாதிகாரத்தை உருவாக்க முயல்கிறது - சஜித் சாடல்
Local
12 August 2026
காணாமல் போன பெண்ணை மீட்பதற்காக நில்வள கங்கையில் தீவிர தேடுதல் நடவடிக்கை
Local
12 August 2026
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்கும் விவகாரம் - ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த இறுதிக் கோரிக்கை
Local
12 August 2026
இன்ஸ்டாகிராமில் அதிக விருப்பங்களை குவித்த தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் – தனுஷ் முதலிடம்!
Local
12 August 2026