இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) இந்த எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தற்போதுள்ள அரசியலமைப்பின் படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் காணப்படுகிறது. புதிய திருத்தத்தின் மூலம் இதனை முறையே 67 மற்றும் 65 ஆக உயர்த்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த அவசர அரசியலமைப்புத் திருத்தமானது நீதிமன்ற அமைப்பின் சுதந்திரத்துக்கும், நியாயமான வழக்கு விசாரணைகளுக்கான உரிமைக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா விசேட பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, இந்த மாற்றங்கள் எதிர்கால நியமனங்களுக்கு மட்டுமன்றி, தற்போது சேவையிலுள்ள நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கும் உடனடியாகப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை பெரும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையான கலந்தாலோசனைகள் இன்றி கொண்டுவரப்படும் இத்தகைய திருத்தங்கள், நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த சட்டத்திருத்தத்துக்கான காரணங்கள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) இந்த எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தற்போதுள்ள அரசியலமைப்பின் படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் காணப்படுகிறது. புதிய திருத்தத்தின் மூலம் இதனை முறையே 67 மற்றும் 65 ஆக உயர்த்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த அவசர அரசியலமைப்புத் திருத்தமானது நீதிமன்ற அமைப்பின் சுதந்திரத்துக்கும், நியாயமான வழக்கு விசாரணைகளுக்கான உரிமைக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா விசேட பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, இந்த மாற்றங்கள் எதிர்கால நியமனங்களுக்கு மட்டுமன்றி, தற்போது சேவையிலுள்ள நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கும் உடனடியாகப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை பெரும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையான கலந்தாலோசனைகள் இன்றி கொண்டுவரப்படும் இத்தகைய திருத்தங்கள், நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த சட்டத்திருத்தத்துக்கான காரணங்கள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
மலையகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க ஆன்மீக விழிப்புணர்வு!" – சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடித் திட்டம்.
Local
15 August 2026
இந்துக்களிடையே பிளவுகளைக் கடந்து வலுவான தலைமைத்துவம் தேவை – சுந்தரலிங்கம் பிரதீப்
Local
15 August 2026
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவு!
Local
15 August 2026
வத்தளை மஹாபாகேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டுக்குள் : உயிர்சேதங்கள் பதிவாகவில்லை !
Local
15 August 2026
"பெரிய திமிங்கலங்கள் விரைவில் அகப்படுவார்கள்!" – பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி!
Local
15 August 2026
வீட்டுக் காவல் திட்டம் இலங்கையில் சாத்தியமா? சுந்தரலிங்கம் பிரதீப் சொன்ன முக்கிய தகவல்!
Local
15 August 2026
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!
Local
15 August 2026
“அரசியல்வாதிகளுக்கு பயம்!” – சிறைச்சாலை மோதல்கள் குறித்து பிரதீப் அதிரடி தகவல்
Local
15 August 2026
அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது - எதிர்க்கட்சியினர் விரைவில் சிறை செல்வர்
Local
15 August 2026
அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது
Local
15 August 2026