General18 August 2026

இருவேறு வழக்குகளில் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குப் பிணை!

கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரம இன்று (18) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்படி, சந்தேகநபரைத் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிட்ட நீதவான், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தார்.

கையூட்டல், ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அவசியமற்ற சந்தர்ப்பத்தில் பணியாளர்கள் சிலரை ஆட்சேர்ப்பு செயத அவர்களை தனிப்பட்ட பணிக்குழாமில் பணிக்கு அமர்த்தி , அரசுக்கு ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் முன்னதாக கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை, பழங்கால 'சந்திரவட்டக்கல்' கலைப்பொருளைக் களவாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes