Top Story
ஈரானில் இருந்து இஸ்ரேலை இலக்கு வைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இஸ்ரேலை நோக்கி வரும் ஈரானிய ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிப்பதற்காகத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக இயங்கி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால் தங்களது படைகள் 'தயார் நிலையில்' (High alert) வைக்கப்பட்டிருந்ததாக இராணுவம் சில நிமிடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தது.

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதலுக்குப் பழிவாங்கப்படும் என்று ஈரானிய உயர் அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையிலேயே, இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லெபனான் எல்லைக்கு அருகாமையிலும், வடக்கு இஸ்ரேலிலும் உள்ள இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மற்றும் படையினரின் இலக்குகளைக் குறிவைத்து தொடர்ச்சியான ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஈரானில் இருந்து ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் விமானப்படை இதுவரை இடைமறித்துள்ளது, என்று கூறியுள்ள இஸ்ரேல் இராணுவம், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட கூடுதல் ஏவுகணைகளையும் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விபரங்களுக்கு
General08 June 2026
இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகளை ஏவியது ஈரான்!
International News

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

International 08 June 2026
தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தொழில்நுட்பம்!

International 08 June 2026
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தொழில்நுட்பம்!

7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

International 08 June 2026
7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு, 129 பேர் காயமடைந்துள்ளனர்

International 08 June 2026
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு, 129 பேர் காயமடைந்துள்ளனர்

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது - டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

International 08 June 2026
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது - டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

காசாவுக்கான எல்லைக் கடவைகள் காலவரையறையின்றி மூடல்!

International 08 June 2026
காசாவுக்கான எல்லைக் கடவைகள் காலவரையறையின்றி மூடல்!

"இனி நேரடியாக மோதுவோம்"-அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

International 07 June 2026
"இனி நேரடியாக மோதுவோம்"-அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி; மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்!

International 07 June 2026
தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி; மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்!

தொழில்நுட்ப உலகில் அடுத்த புரட்சி: பிறந்த குழந்தைகளுக்காக அறிமுகமான அரசின் விசேட AI செயலி!

International 07 June 2026
தொழில்நுட்ப உலகில் அடுத்த புரட்சி: பிறந்த குழந்தைகளுக்காக அறிமுகமான அரசின் விசேட AI செயலி!

AI தொழில்நுட்பம் புதிய வேலைவாய்ப்பு பாதைகளை உருவாக்கும்: சுந்தர் பிச்சை உறுதி!

International 07 June 2026
AI தொழில்நுட்பம் புதிய வேலைவாய்ப்பு பாதைகளை உருவாக்கும்: சுந்தர் பிச்சை உறுதி!

1 கிலோ வெண்டைக்காய் 7,200 ரூபாயா..!

International 07 June 2026
1 கிலோ வெண்டைக்காய் 7,200 ரூபாயா..!

உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை: 165 பக்தர்கள் உயிரிழப்பு!

International 07 June 2026
உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை: 165 பக்தர்கள் உயிரிழப்பு!

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக் பரிந்துரை

International 07 June 2026
தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக் பரிந்துரை

அரசியல் தரப்புக்களில் பரபரப்பு : திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ராகவா லோரன்ஸ் போட்டி?

International 07 June 2026
அரசியல் தரப்புக்களில் பரபரப்பு : திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ராகவா லோரன்ஸ் போட்டி?

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுகிறதா செயற்கை நுண்ணறிவு?

International 07 June 2026
மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுகிறதா செயற்கை நுண்ணறிவு?
More News
General08 June 2026

இன்று முதல் தனியார் பேருந்து சேவைகளில் கட்டுப்பாடு

தனியார் பேருந்து சேவைகளை இன்று (8) முதல் கட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே, அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அத்துடன், தங்களின் சங்கத்தினால் கோரப்பட்ட பேருந்து கட்டண திருத்தம் அல்லது மானியம் வழங்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று கூறியுள்ளார்.அண்மையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி அனைத்து எரிபொருள் விலைகளையும் அதிகரித்திருந்தது.அதன்படி, ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு இணையாக பேருந்து கட்டணத்தை 5 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டுமென பேருந்து சங்கங்கள் கோரி வருகின்றன.இந்த நிலையில், பேருந்து கட்டண திருத்தங்களை மேற்கொள்ளும் அளவுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அவை எந்தவித உடன்பாடுமின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இன்று முதல் தனியார் பேருந்து சேவைகளில் கட்டுப்பாடு
General08 June 2026

குடும்பத் தகராறு: கணவனை ஆயுதத்தால் தாக்கிய மனைவி கைது

ஹொரணை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட அரம்பகந்த பகுதியில் நேற்று (07) அதிகாலை ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது, கணவனைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அரம்பகந்த பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே, வீட்டின் உள்ளே வைத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே, உயிரிழந்தவரின் மனைவியான சந்தேகநபர் ஹொரணை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

விபரங்களுக்கு
குடும்பத் தகராறு: கணவனை ஆயுதத்தால் தாக்கிய மனைவி கைது
General08 June 2026

மத்திய கிழக்கு தாக்குதலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை

ஈரான் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உடனடியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தாக்குதல் குறித்த செய்திகள் வெளியான ஒரு மணி நேரத்திற்குள், சர்வதேச அளவில் பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 3.63 சதவீதத்தால் உயர்வடைந்து, ஒரு பீப்பாய் 96.75 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை, WTI மசகு எண்ணெயின் விலையும் 3.35 சதவீதத்தால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 93.89 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

விபரங்களுக்கு
மத்திய கிழக்கு தாக்குதலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை
General08 June 2026

19 கோடி ரூபாய் போலி டொலர்களுடன் வெல்லம்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கைது

வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபாய் பெறுமதியான போலி டொலர்களுடன் பெண் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விபரங்களுக்கு
19 கோடி ரூபாய் போலி டொலர்களுடன் வெல்லம்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கைது
General08 June 2026

ஈரானின் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்படை திடீர் தாக்குதல்!

ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள அந்த நாட்டு ஆட்சிக்குச் சொந்தமான இராணுவ இலக்குகளைத் தமது வான்படை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபரங்களுக்கு
ஈரானின் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்படை திடீர் தாக்குதல்!
International News

தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

International 08 June 2026
தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தொழில்நுட்பம்!

International 08 June 2026
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தொழில்நுட்பம்!

7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

International 08 June 2026
7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு, 129 பேர் காயமடைந்துள்ளனர்

International 08 June 2026
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு, 129 பேர் காயமடைந்துள்ளனர்

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது - டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

International 08 June 2026
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது - டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

காசாவுக்கான எல்லைக் கடவைகள் காலவரையறையின்றி மூடல்!

International 08 June 2026
காசாவுக்கான எல்லைக் கடவைகள் காலவரையறையின்றி மூடல்!

"இனி நேரடியாக மோதுவோம்"-அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

International 07 June 2026
"இனி நேரடியாக மோதுவோம்"-அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி; மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்!

International 07 June 2026
தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி; மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொடூரம்!

தொழில்நுட்ப உலகில் அடுத்த புரட்சி: பிறந்த குழந்தைகளுக்காக அறிமுகமான அரசின் விசேட AI செயலி!

International 07 June 2026
தொழில்நுட்ப உலகில் அடுத்த புரட்சி: பிறந்த குழந்தைகளுக்காக அறிமுகமான அரசின் விசேட AI செயலி!

AI தொழில்நுட்பம் புதிய வேலைவாய்ப்பு பாதைகளை உருவாக்கும்: சுந்தர் பிச்சை உறுதி!

International 07 June 2026
AI தொழில்நுட்பம் புதிய வேலைவாய்ப்பு பாதைகளை உருவாக்கும்: சுந்தர் பிச்சை உறுதி!

1 கிலோ வெண்டைக்காய் 7,200 ரூபாயா..!

International 07 June 2026
1 கிலோ வெண்டைக்காய் 7,200 ரூபாயா..!

உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை: 165 பக்தர்கள் உயிரிழப்பு!

International 07 June 2026
உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை: 165 பக்தர்கள் உயிரிழப்பு!

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக் பரிந்துரை

International 07 June 2026
தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக் பரிந்துரை

அரசியல் தரப்புக்களில் பரபரப்பு : திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ராகவா லோரன்ஸ் போட்டி?

International 07 June 2026
அரசியல் தரப்புக்களில் பரபரப்பு : திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ராகவா லோரன்ஸ் போட்டி?

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுகிறதா செயற்கை நுண்ணறிவு?

International 07 June 2026
மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுகிறதா செயற்கை நுண்ணறிவு?
Sports Stories
Explore More
காற்பந்து வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் 'Trionda' ஸ்மார்ட் பந்து!

காற்பந்து வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் 'Trionda' ஸ்மார்ட் பந்து!

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 பிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடர், புதிய தொழில்நுட்பப் புரட்சியுடன் ஆரம்பமாகவுள்ளது.அதிகளவிலான நாடுகள் பங்கேற்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக, 'அடிடாஸ்' (Adidas) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 'ட்ரியோண்டா' (Trionda) என்ற உத்தியோகபூர்வ போட்டிப் பந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பானிய மொழியில் 'மூன்று அலைகள்' எனப் பொருள்படும் இந்த பெயர், இந்த முறை போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், நவீன காற்பந்து விளையாட்டின் வேகத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.இந்த 'ட்ரியோண்டா' பந்தின் உட்பகுதியில் 'இனெர்ஷியல் மெசர்மென்ட் யூனிட்' (IMU) எனப்படும் அதிநவீன சென்சார் சிப் (Sensor Chip) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் காற்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.இந்தச் சிறிய சென்சார், ஒரு வினாடிக்கு 500 முறை தரவுகளைப் பதிவுசெய்து, பந்தின் வேகம், முடுக்கம் மற்றும் முப்பரிமாண (3D) நகர்வுகளை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் பந்து செல்லும் திசையின் ஒவ்வொரு நொடி மாற்றத்தையும் நடுவர்களால் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.நடுவர்களின் முடிவுகளில் மனிதத் தவறுகளைக் குறைத்து, விளையாட்டின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்துவதே இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும் என சர்வதேச காற்பந்துச் சம்மேளனம் (FIFA) தெரிவித்துள்ளது.குறிப்பாக, நடுவர்களுக்குப் பெரும் சவாலாக அமையும் Offside முடிவுகள், Handball சர்ச்சைகள் மற்றும் பந்து திசைமாறும் சந்தர்ப்பங்களில், வீடியோ உதவி நடுவர் (VAR) முறைமைக்கு இந்த சென்சார் வழங்கும் நேரடித் தரவுகள் பக்கபலமாக அமையும்.இது குறித்து பிஃபாவின் ஆராய்ச்சி மற்றும் தரநிலைகளுக்கான தலைவர் நிக்கோலஸ் எவன்ஸ் , "முப்பரிமாண வெளியில் பந்து எந்தப் புள்ளியில், எவ்வாறு பயணிக்கிறது என்பதை இந்த சென்சார் துல்லியமாக வெளிப்படுத்தும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியொன்றின் போது, முழுமையாக மின்னூட்டம் (Charge) செய்யப்பட்ட 15 முதல் 20 வரையிலான 'ஸ்மார்ட்' பந்துகள் தயாராக வைக்கப்பட்டிருக்கும். இதில் ஒவ்வொரு பந்தும் போட்டியில் பயன்படுத்தப்படும் போது, தொடர்ந்து 6 மணித்தியாலங்கள் வரை இயங்கும் ஆற்றல் கொண்டவை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு
விசா சிக்கல்களுக்கு மத்தியில் மெக்சிகோவை சென்றடைந்தது ஈரான் கால்பந்து அணி!

விசா சிக்கல்களுக்கு மத்தியில் மெக்சிகோவை சென்றடைந்தது ஈரான் கால்பந்து அணி!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக ஈரான் தேசிய கால்பந்து அணி மெக்சிகோவை சென்றடைந்துள்ளது. இம்முறை அமெரிக்காவில் நடைபெறவுள்ள மூன்று குழுநிலைப் போட்டிகளுக்கு முன்னதாக, மெக்சிகோவில் தங்கி அவர்கள் தமது இறுதிகட்ட பயிற்சிகளை முன்னெடுக்கவுள்ளனர்.துருக்கியின் அந்தல்யா நகரிலிருந்து தனிநபர் சொகுசு வானூர்தி மூலம் மெக்சிகோவின் டிஹுவானா வானூர்தி நிலையத்தை சென்றடைந்த ஈரான் அணியினருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அணியின் நட்சத்திர வீரர் எஹ்சான் ஹஜ்சாபி தலைமையில், நீல நிற பிளேஸர் மற்றும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்திருந்த வீரர்கள் மெக்சிகோ அதிகாரிகளின் பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் பிரத்தியேக பேருந்து மூலம் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது வானூர்தி நிலைய வாசலில் திரண்டிருந்த ஈரான் ரசிகர்கள் தேசியக் கொடிகளை அசைத்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.ஈரான் அணி இந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதானது தற்போதைய அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்ச் சூழலால் பெரும் சிக்கலுக்குள்ளாகியிருந்தது. குறிப்பாக, விசாக்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, ஈரான் அணி அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள டக்சன் நகரில் நடைபெறவிருந்த தனது பயிற்சி முகாமை, கலிபோர்னியா எல்லைக்கு அருகில் உள்ள மெக்சிகோவின் டிஹுவானா நகரிற்கு மாற்றியமைக்க நேரிட்டது.முன்னதாக, கடந்த மார்ச் மாதம் கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வீரர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்வைத்து, ஈரான் அணி இந்தத் தொடரில் பங்கேற்பது பொருத்தமானது எனத் தான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அதற்கு அடுத்த நாளே அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஈரான் தேசிய அணி, உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதிலிருந்து தங்களை எவராலும் விலக்கி வைக்க முடியாது என உத்தியோகபூர்வமாகப் பதிலடி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சச்சினின் சாதனையை உடைத்த சூர்யவன்ஷி - தந்தை நெகிழ்ச்சி

சச்சினின் சாதனையை உடைத்த சூர்யவன்ஷி - தந்தை நெகிழ்ச்சி

15 வயதே ஆன கிரிக்கெட் இளம் சாதனையாளர் வைபவ் சூர்யவன்ஷி, இந்தியத் தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   இதன் மூலம், இந்தியத் தேசிய அணிக்குள் நுழைந்த மிக இளைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தொடர்ந்து, பீகாரில் உள்ள அவரது சொந்த மாவட்டமான சமஸ்திபூரில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களும், வாழ்த்து தெரிவிக்க வரும் பொதுமக்களும் குவிந்து வருகின்றனர். இது தொடர்பாக, வைபவ்வின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ,இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தனது மகிழ்ச்சியையும், வைபவ்வின் கிரிக்கெட் பயணம் குறித்தான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த தேர்வு குறித்துப் பேசிய சஞ்சீவ் சூர்யவன்ஷி, "இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு மாபெரும் தருணம், எங்கள் கனவு நனவாகியுள்ளது. வைபவ் தற்போது இலங்கையில் பயிற்சி பெற்று வருவதால் இன்னும் அவரிடம் பேச முடியவில்லை. அணித் தேர்வுக்கு முந்தைய நாள் இரவு என்னிடம் பேசிய வைபவ், தனது இதயம் வேகமாகத் துடிப்பதாகக் கூறினான். அவனுக்குத் தைரியம் கூறி அமைதிப்படுத்தினேன்" என்று குறிப்பிட்டார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் சர் டொன் பிராட்மேன் ஆகியோருடன் வைபவ்வை ஒப்பிட்டுப் பேசப்படுவது குறித்துக் கேட்கப்பட்ட போது, அந்த ஒப்பீடுகள் முற்றிலும் தவறானவை என்று அவரது தந்தை மறுத்தார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் போன்ற உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களின் முதல் பந்திலேயே வைபவ் சிக்ஸர் அடிக்கும் அச்சமற்ற மனநிலை குறித்து அவரது தந்தை விளக்கமளித்தார். "அது முற்றிலும் அவனுடைய சொந்த உத்தி. அவன் போட்டிகளில் விளையாடும்போது, வயது மூத்த சிறுவர்கள் அவனை ஒரு 'குழந்தை' என்று அலட்சியப்படுத்துவார்கள். அப்போது எதிரணியின் நட்சத்திர பந்துவீச்சாளரை நான் அவனுக்குக் காட்டுவேன். வைபவ் வேண்டுமென்றே அந்தப் பந்துவீச்சாளரைக் குறிவைத்து சிக்ஸர் அடிப்பான். தன்னை வயதால் மதிப்பிடாமல், திறமையால் மதிக்க வேண்டும் என்பதற்காக அவனாகவே உருவாக்கிய உத்தி இது" என்று சஞ்சீவ் கூறினார். வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச டி20 கிரிக்கெட் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்திருந்தாலும், அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டையும் (T20, ஒருநாள் போட்டி, டெஸ்ட்) விளையாடவே விரும்புகிறார். ஐபிஎல் போட்டிகளில் அவரது அதிரடி ஆட்டம் அறியப்பட்டாலும், 50 ஓவர் போட்டியில் ஒரே போட்டியில் 332 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டையும் அவர் சமமாக விரும்புவதாக அவரது தந்தை தெரிவித்தார்.

விபரங்களுக்கு
பிசிசிஐ-யின் அதிரடி சலுகை : இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் அவரது பெற்றோரும் பயணிக்க சிறப்பு அனுமதி!

பிசிசிஐ-யின் அதிரடி சலுகை : இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் அவரது பெற்றோரும் பயணிக்க சிறப்பு அனுமதி!

இந்திய கிரிக்கெட் அணியின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் (Vaibhav Suryavanshi) அவரது பெற்றோரும் உடன் இருப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷிக்கு தற்போது 15 வயதே ஆவதாலும், அவர் முதல்முறையாக சீனியர் அணியில் விளையாட இருப்பதாலும், அவரின் வசதியைக் கருத்திற்கொண்டே பிசிசிஐ இந்த விசேட முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இளம் வீரர் ஒருவரின் சர்வதேசப் பயணத்தின் போது அவரது பெற்றோரும் உடன் தங்குவதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியிருப்பது விளையாட்டு தரப்புக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்!

ஜமைக்காவில் கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துகளை வீசி முடிக்காதமைக்காக (Slow Over-rate) இலங்கை கிரிக்கெட் அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி, கால அவகாசங்களைக் கணக்கிட்ட பின்னரும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவை நடுவர்கள் குழுவின் முதன்மை நடுவரான ரிச்சி ரிச்சர்ட்சன் இந்த அபராதத்தை விதித்துள்ளார்.வீரர்கள் மற்றும் வீரர்களுக்கான துணைக் குழுவினருக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதியின் 2.22 அத்தியாயத்தின்படி, குறைந்தபட்ச ஓவர் வீதக் குற்றங்களுக்காக, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி ஊதியத்தில் இருந்து ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இதன் அடிப்படையிலேயே இரண்டு ஓவர்கள் குறைவாக வீசிய இலங்கை அணிக்கு 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு, விதிக்கப்பட்ட அபராதத்தை ஏற்றுக்கொண்டதால், இது குறித்த உத்தியோகபூர்வ விசாரணை எதற்கும் தேவையேற்படவில்லை.கள நடுவர்களான லெஸ்லி ரெய்ஃபர், வேய்ன் நைட்ஸ் மற்றும் மூன்றாவது நடுவர் அல்லாஹுதீன் பலேக்கர், நான்காவது நடுவர் கிறிஸ்டோபர் டெய்லர் ஆகியோர் இந்த விதியின் கீழ் இலங்கை அணிக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

விபரங்களுக்கு
சூர்யகுமார் யாதவ் அதிரடி நீக்கம்: காரணத்தை உடைத்தது BCCI!

சூர்யகுமார் யாதவ் அதிரடி நீக்கம்: காரணத்தை உடைத்தது BCCI!

அண்மையில் இந்திய அணிக்கு 3ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்று தந்து வரலாற்று சாதனை படைத்த போதிலும், சூர்யகுமார் யாதவ் இந்திய இருபதுக்கு 20 அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டமைக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) முதன்மை தேர்வாளர் அஜித் அகர்கர் பகிரங்கப்படுத்தியுள்ளார். 35 வயதான சூர்யகுமார் யாதவ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமன்றி, அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குழாமிலும் சேர்க்கப்படவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக சூர்யகுமார் யாதவின் ஆட்டத்திறன் (Form) எதிர்பார்த்த அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அஜித் அகர்கர், 2025 ஜனவரி 1 முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் அவர் விளையாடிய 35 போட்டிகளில் வெறும் 702 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளதாகவும், இதனால் அவரின் சராசரி 26 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் இருபதுக்கு 20 போட்டிகளில் 43.60 ஆக இருந்த அவரது துடுப்பாட்ட சராசரி, 2024 ஜூலையில் தலைவரான பிறகு 25.88 ஆகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பிந்தைய இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை கருத்திற் கொண்டு, அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான சிறந்த வழி இதுவே எனத் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த அஜித் அகர்கர், உலகக் கிண்ணத்தை வென்று தந்த ஒருவருடன் இத்தகைய விவாதத்தை நடத்துவது எளிதான காரியம் அல்ல என்றும், இது ஒரு கடினமான முடிவு என்றாலும் அணியின் எதிர்கால நலனைக் கருதியே எடுக்கப்பட்டதுடன் இது குறித்து சூர்யகுமாரிடம் தாம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய இருபதுக்கு 20 தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
இந்திய டி20 அணியின் புதிய தலைவரானார் ஸ்ரேயாஸ் ஐயர்: சூர்யவன்சிக்கும் வாய்ப்பு!

இந்திய டி20 அணியின் புதிய தலைவரானார் ஸ்ரேயாஸ் ஐயர்: சூர்யவன்சிக்கும் வாய்ப்பு!

இந்திய இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளதாக அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தேர்வுத் குழு இன்று அறிவித்துள்ளது.அதன்படி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 தொடர்கள், அத்துடன் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைவராக செயல்படுவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, அண்மையில் உலகக் கிண்ணத்தை வென்று தந்த சூர்யகுமார் யாதவ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இருபதுக்கு 20 அமைப்பில் இருந்தே முற்றிலும் வெளியில் தள்ளப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் திலக் வர்மா இந்தியாவின் புதிய இருபதுக்கு 20 துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்களான ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் இந்த இருபதுக்கு 20 தொடர்களுக்கான இந்திய அணிகளில் சேர்க்கப்படவில்லை என்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த அறிவிப்பில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது 15 வயதே ஆன இளம் அதிரடி துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி குழாமில் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் செம்மஞ்சள் தொப்பியை (Orange Cap) வென்றதுடன், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்ற வைபவ் சூர்யவன்சி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய இருபதுக்கு 20 தொடர்களுக்கான இந்திய குழாமிலும் உள்வாங்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று ஒரே நாளில் நான்கு வெவ்வேறான தொடர்களுக்கான இந்திய குழாம்களை அறிவித்துள்ளது. அதன்படி, அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர், ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்!

பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்!

மலையாள திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வளம் வந்த நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவால் தனது 57ஆவது வயதில் காலமானார்.   திடீர் உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவரின் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகிற்குள் நுழைந்த அவர், 1997இல் 'இஷ்டமானு நூறு வட்டம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சலீம் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பெத்தி திரைப்படம் ஒரு நாளில் 135 கோடிக்கும் மேல் வசூல் சாதனை

பெத்தி திரைப்படம் ஒரு நாளில் 135 கோடிக்கும் மேல் வசூல் சாதனை

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரின் பிரதான நடிப்பில், புஜ்ஜி பாபு சனாவின் இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ திரைப்படம் நேற்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி, திவ்யேந்து உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 135.36 கோடி ரூபாவிற்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வார இறுதி நாட்களைக் கடக்கும் போது, ‘பெத்தி’ திரைப்படம் மேலும் பாரிய வசூல் சாதனைகளை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விபரங்களுக்கு
அமீர்கான் கரம் பிடிக்கும் 'கௌரி ஸ்ப்ராட்' யார்?

அமீர்கான் கரம் பிடிக்கும் 'கௌரி ஸ்ப்ராட்' யார்?

பொலிவுட் திரையுலகின் முன்னணி மற்றும் பிரபல நட்சத்திர நடிகரான அமீர்கான் (Aamir Khan), தனது 61 ஆவது வயதில் 3 ஆவது முறையாக மீண்டும் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் இணையதளங்களை அதிர வைத்துள்ளன. தனது தனித்துவமான நடிப்பால் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள அமீர்கான், ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பொலிவுட்வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள புதிய விபரங்களின்படி, நடிகர் அமீர்கான் தனது நீண்ட காலத் தோழியான கௌரி ஸ்ப்ராட் (Gauri Spratt) என்பவரை வரும் 5 ஆம் திகதி (நாளை) முறைப்படி கரம் பிடிக்க உள்ளதாகப் புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன. 61 வயதிலும் தனது காதலைத் திருமண பந்தமாக மாற்றத் துணிந்துள்ள இந்த விசித்திர நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகினரையும், ரசிகர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், இவர்களின் தற்போதைய புகைப்படங்கள் அவர் சமூக ஊடகங்களில் அசுர வேகம் எடுத்து வருகிறது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபரங்களுக்கு

"என் இசைக்கான குரல்" - எஸ்.பி.பியின் 80ஆவது பிறந்தநாளில் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பதிவு!

மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது நினைவுகளைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். "என் கரம் பற்றிய விரல், என் இசைக்கான குரல் அன்னையா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாள் இன்று... அவர் வாழ்க, குரலாக.." திரையுலகில் தங்களுக்குள் இருந்த நெருங்கிய நட்பையும், தனது பல சூப்பர் ஹிட் பாடல்களுக்குப் பின்னணியாக இருந்த எஸ்.பி.பியின் குரலையும் நினைவு கூர்ந்து கமல் வெளியிட்டுள்ள இந்த உருக்கமான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விபரங்களுக்கு
இலட்சங்கள் முதல் கோடிகள் வரை ஜொலிக்கும் இந்திய சினிமா பிரபலங்களின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த மோதிரங்கள்

இலட்சங்கள் முதல் கோடிகள் வரை ஜொலிக்கும் இந்திய சினிமா பிரபலங்களின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த மோதிரங்கள்

திரையுலகில் காதல் திருமணக் கதைகள் பல வந்தாலும், நட்சத்திரங்களின் விரல்களில் மின்னும் அந்த நிச்சயதார்த்த மோதிரங்கள் மட்டும் ஒவ்வொரு ஜோடியின் காதலையும் தனித்துவமாகப் பதிவு செய்துவிடுகின்றன. அதனால்தான், பிரபலங்களின் திருமண அறிவிப்பை விட அவர்களின் விரல்களை அலங்கரிக்கும் அந்த ஒரு மோதிரமே ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பேசு பொருளாக உள்ளன.இந்தியத் திரையுலகில் அதிக கவனம் ஈர்த்த, கோடிகள் மதிப்புள்ள சில நட்சத்திரங்களின் நிச்சயதார்த்த மோதிரங்களின் சுவாரசியப் பின்னணியை பார்க்கையில்,நடிகர் விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகாவின் நிச்சயதார்த்த மோதிரம், 16 விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட வைர மோதிரமாகும். இதன் மதிப்பு சுமார் 30 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் தென்னிந்தியத் திரையுலகில் அதிகளவில் பேசப்பட்ட சமந்தாவின் நிச்சயதார்த்த மோதிரத்தின் மதிப்பு, 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.நயன்தாரா திருமணத்தின் போது, நயன்தாரா அணிந்திருந்த வைரத்தின் அளவு மற்றும் அதன் தரத்தை வைத்து, அந்த மோதிரத்தின் மதிப்பு 50 இலட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என நகை வல்லுநர்கள் கணித்திருந்தனர்.நடிகர் சித்தார்த்தை மணந்த அதிதி ராவ், விண்டேஜ் (Antique) பாணியிலான மோதிரத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். இரு ஆன்மாக்களின் இணைப்பைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'இரட்டைக்கல் வைர மோதிரம்' (Toi et Moi style) இவருடைய தனித்துவ அடையாளமாக அமைந்தது.ரன்வீர் சிங்கின் காதலியான தீபிகா, கண்ணைக் கவரும் செவ்வக வடிவ ஒற்றைக்கல் (Emerald-cut Solitaire) வைர மோதிரத்தை அணிந்திருந்தார். இதன் மதிப்பு 1 கோடி முதல் 2.7 கோடி ரூபாய் வரை இருக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.நிக் ஜோனஸை கரம்பிடித்த பிரியங்கா சோப்ராவின் மோதிரம், உலகப் புகழ்பெற்ற டிஃப்பனி (Tiffany & Co.) நிறுவனத்தின் 'குஷன் கட்' (Cushion-cut) வைரத்தால் வடிவமைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் ஆகும்.இந்தப் பட்டியலில் உச்ச விலையில் இருப்பது ஷில்பா ஷெட்டியின் மோதிரம்தான். சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 கரட் கம்பீரமான ஒற்றைக்கல் வைர மோதிரம் இவருடைய விரலை அலங்கரித்தது.திருமண பந்தத்திற்குள் நுழையும் இந்த நட்சத்திரங்களின் காதலைப் போலவே, அவர்களின் நிச்சயதார்த்த மோதிரங்களின் மதிப்பும், வடிவமைப்புமே திரையுலகில் என்றும் அழியாத பிரம்மாண்டக் கதைகளாக உலா வருகின்றன.

விபரங்களுக்கு
ஜேசன் சஞ்சயின் அறிமுகத் திரைப்படம் 'சிக்மா': ஜூலை 31 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது!

ஜேசன் சஞ்சயின் அறிமுகத் திரைப்படம் 'சிக்மா': ஜூலை 31 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது!

தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம், எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. சுந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படம், புதையல் வேட்டை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட ஒரு அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. 4 மாத காலப்பகுதியில் மொத்தம் 65 நாட்களில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளதுடன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அஜித் குமாரின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய்

அஜித் குமாரின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய்

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று மோகினி மணி வயது மூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், முதலமைச்சர் விஜய் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////