International19 June 2026

சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு ஈரான் விடுத்த அதிரடி சலுகை! ஹோர்முஸ் நீரிணையில் புதிய உத்தரவு!

ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்ல விரும்பும் வணிகக் கப்பல்களுக்கு மிக விரைவாகப் பயண அனுமதிகளை வழங்குமாறு 'பெர்சிய வளைகுடா நீரிணை அதிகாரசபைக்கு' (Persian Gulf Strait Authority) ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றும் நோக்கில், கப்பல்களின் அனுமதி கோரும் விண்ணப்பங்களை அதிவேகத்துடனும் முன்னுரிமையுடனும் பரிசீலித்து பதிலளிக்குமாறு அந்த அதிகாரசபையின் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வணிகக் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்தும் மற்றும் ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அடுத்த 60 நாட்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் எந்தவொரு வணிகக் கப்பல்களிடமிருந்தும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் அறிவித்துள்ளது.

மசகு எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சர்வதேச கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவர ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திச் சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes