General12 July 2026

பலாலியில் தொடரும் காணி மீட்புப் போராட்டம்

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து 36 ஆண்டுகளாகத் தமது காணிகளை இழந்துள்ள மக்கள், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (12) பலாலி சந்தியில் நான்காவது தடவையாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளில், இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளிலும், வர்த்தக நிலையங்களை அமைத்தும் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நீண்டகாலமாக நிலங்கள் மற்றும் வீடுகள் இன்றி இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய போராட்டத்தின் போது, கொட்டகை அமைத்துப் போராட்டத்தைத் தொடர மக்கள் முயற்சித்த போதிலும், காவல்துறையினர் அதனைத் தடுத்துள்ளனர்.

இருப்பினும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பலாலி சந்தியில் மக்கள் தொடர்ச்சியாகத் தமது காணி மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes