Entertainment12 July 2026

மும்பையில் கனமழை: தண்டவாளத்தில் நீந்தும் மீன்கள் - வைரலாகும் காணொளியால் மக்கள் அதிர்ச்சி!

இந்தியாவின், மும்பையில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழையால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையின் காரணமாக, பெரும்பாலான வீதிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.

இதன் காரணமாக தொடருந்து தண்டவாளங்களிலும் தண்ணீர் புகுந்துள்ள நிலையில், அதில் மீன்கள் நீந்திச் செல்லும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடருந்து தண்டவாளங்கள் முழுமையாகத் தண்ணீரில் மூழ்கியுள்ளதைக் காட்டும் இந்த காணொளிகள், மும்பையில் வெள்ளம் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

தண்டவாளங்களில் மீன்கள் நீந்துவதைக் கண்ட நெட்டிசன்கள், இந்த அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போக்குவரத்திற்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes